Sunday 6 May, 2007

என் உரைக்கு நடுவர் ரசிகவ் ஞானியார் comment

 //நடுவர் அங்கிள் ( கல்யாணம் ஆய்டிச்சில்ல!) ரொம்ப நல்லவர்னு எனக்கு
> தெரியும்.. அவர் ரொம்ப விவரமானவர்னும் தெரியும்... ஆகவே நல்லதொரு தீர்ப்ப
> சொல்லுவார் என்ற நம்பிக்கையில் முதலில் நடுவர் அங்கிளுக்கு வணக்கம்.//

நான் உங்களை அங்கிள்னு அழைத்துவிடக்கூடாதுன்னு முந்திகிட்டீங்க...உங்க
முன்னெச்சரிக்கைக்கு பாராட்டுக்கள்..  :)

இந்த நாட்டாமை  ஆட்களைப் பார்த்து தீர்ப்பு சொல்லமாட்டான்...கருத்துக்கள்தான்
முதலிடம்...

( நாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு இப்பவே எங்கிருந்தோ சத்தம் கேட்குது :)    )

    ஏனென்றால் மனிதனுக்கு பொதுவாகவே வீம்பு , வைராக்கியம் அதிகம். அதிலும்

> ஆண்களுக்கு கூடதலாகவே இருக்கும்.

 
மூடியைக் கழட்டுறமாதிரி ஆரம்பிச்சு நம் இதயத்தை கழட்டிட்டாருப்பா சஞ்சய்காந்தி.

பொதுவாகவே ஆண்களுக்கு பெண்களை விடவும் வீம்பு வைராக்கியம் அதிகம் அதானால் அவுக
முதல்ல சொல்லமாட்டாக...பெண்கள்தான் சொல்லுவாங்கன்னு சொல்றாரு... அது என்னவோ
எனக்கு சரியாகத்தான் படுதுங்க..

 . என்னடா இது, இப்படி கூடவா ட்ரெஸ் பன்னுவாங்க? அப்படினு நெனச்சி தான் நாம

> அவங்கள் பார்ப்போம். ஆனா அவங்களுக்கு இது புரியாது. ஏதோ நாம அவங்கள ரசிச்சி
> தான் அப்படி பார்ப்பதாக நினைத்து கொண்டு , தினம் தினம் அப்படியே வருவாங்க.

 
நாம யதேச்சையாகத்தான் பார்ப்போம் ஆனா அவங்கதான் நம்ம அழகை அவன் ரசிக்கிறானோ
என்று நினைத்துக்கொண்டு, தோழிகளிடம் சிரிப்பது போல் நடிப்பது , அடிக்கடி
மேக்கப் கலையாமல் பார்த்துக்கொள்வது, என்று இல்லாத சேட்டைகள் எல்லாம்
பண்ணுவார்கள;

அதனால ஆண்கள் கல்லெறிவது போல நினைச்சாலும் முதல்ல பெண்கள் தான் கல்லெறியுறாங்க
அப்படின்னு நச்சுன்னு சொல்றாரு நம் சஞ்சய்

 நாம் எதேச்சயாக அவர்களை பார்த்து விட்டாலும், எதோ அவர்களை பார்ப்பதற்காகவே

> திரும்பியதாக நினைத்து கொண்டு போகிற போக்கில் ஒரு புன்னகையை வேறு விட்டு
> செல்வார்கள்.

 
தனிப்பட்ட அனுபவத்துல சொல்வது போல..இருந்தாலும் உண்மையைத்தான் சொல்றாரு...
பாவம் எதிரணிக்காரங்கள இப்ப பார்க்க பரிதாமத்தான் இருக்கு...

> சில பல முயற்சிகளுக்கு பிறகு அந்த பெண்ணின் மனதில் இருந்த காதலை
> வெளிச்சதுக்கு கொன்டுவந்து இவன் இருட்டில் மாட்டிக்கொள்வான்.

 
அவள் மனசுல வெளிச்சத்தைக் கொண்டு வந்துட்டு இவன் இருட்டுல போய்
உட்கார்ந்துக்குடுவான்னு கவித்துவமா சொல்லியிருக்காரு பாருங்க..

 ஆகவே நடுவர் அங்கிள்,

> அமைதியாய் இருக்கும் ஆண் மனதில் காதல் விதையை விதைத்து, காதல் குளத்தில்
> முதலில் கல்லெறிவது பெண்களே என சொல்லிக்கொண்டு "அய்யோ பாவம்" அணியினருக்கு என்
> ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

 
காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
அவள் காதலிப்பாள் என்ற கற்பனையிலையே
 உயிர் வாழ்கிறான்

 > வீம்புக்கும் வைராக்கியத்துக்கும் என் அக்கா கொடுக்கும் உதாரணம்.

> <<சமீபத்தில் சிறிய அளவிலான ஒரு புறநகர் மிருகக்காட்சி சாலைக்குச்
> சென்றிருந்தேன். மயிலொன்று தோகை விரித்தாடியது. பெண் மயில்
> கண்டுகொள்ளவேயில்லை.
> அது பாட்டுக்கு நடந்து திரிந்துகொண்டிருந்தது. ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
> ஆண்
> மயிலுக்கோ வேறு எண்ணமே மண்டைக்குள் ஓடவில்லை. சுற்றிச் சுற்றி, பின்தொடர்ந்து

> முன்தொடர்ந்து, பின்னால் போனால் முன்னால் வந்து, கண்டுகொள்ளாமல் போனால்
> மீண்டும் வந்து... இப்படியாக அரும்பாடுபட்டுக்கொண்டிருந்தது. இதையே தான்
> மனிதகுல ஆண்மக்களும் தொன்றுதொட்டு அன்று முதல் இன்று வரை
> செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள். >>

> <<கடைக்கண் பார்வை என்பதைக் காதல் குளத்தில் கல்லெறிவதற்கு
> ஒப்பிடமுடியாது.ஒரு
> பெண் கடைக்கண் பார்வை வீசினாலும் மனம் விரும்பினாலும் மௌனம் காப்பாள்.
> காதலைச்
> சொல்லாமல் தனக்குள் மருகிக்கொண்டிருந்தாலும் சரி, முதல் அடி
> எடுத்துவைக்கமாட்டாள். அவனோ இதைக் கண்டுகொள்வான்>>

> கடைக்கண் பார்வையை வேண்டுமானால் கல் எறிவதற்கு ஒப்பிட முடியாமல் இருக்கலாம்.
> ஆனால் மனம் விரும்புவதை என்னவென்று எடுத்துக்கொள்வது?
> இல்லாத ஒன்றை யாரும் கண்டுகொள்ள முடியாது... என் அன்பு அக்காவின் கருத்து
> படியே சொல்வதென்றால் , முதலில் காதல் குளத்தில் கல் எறிவது பெண்தான். அதை
> கன்டுகொள்வதுதான் ஆண்.
> காதல் விதையை விதைபது பெண். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு வளர்பது
> மட்டும் தான் ஆண்.

> ஆகவே நடுவர் அங்கிள்,
> அமைதியாய் இருக்கும் ஆண் மனதில் காதல் விதையை விதைத்து, காதல் குளத்தில்
> முதலில் கல்லெறிவது பெண்களே என சொல்லிக்கொண்டு "அய்யோ பாவம்" அணியினருக்கு என்
> ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

காதலை எடுத்துச் சொன்னால்
மறுத்திடுவாளோ என்று
ஆகவே பெண்கள்தான் காதல் குளத்தில் கல்லெறகிறார்கள் என்று பேசிவிட்டு
எதிரணியைமுறைச்சுட்டு போறாரு நம்ம சஞ்சய்..அடுத்து மூர்த்தி அவர்கள் ஆண்களேன்னு
பேசறுதுக்காக வேகமாக வர்றாரு..பார்த்து கீழே விழுந்திடாம்ம வாங்க *மூர்த்தி...*

- ரசிகவ் ஞானியார்

 
--
*Gandhi..SSSanjaiGandhi*
     Its None of my Business What you Think of Me.

அன்புடன் பட்டிமன்றத்தில் என் உரை..

நடுவர் அங்கிள் ( கல்யாணம் ஆய்டிச்சில்ல!) ரொம்ப நல்லவர்னு எனக்கு தெரியும்.. அவர் ரொம்ப விவரமானவர்னும் தெரியும்... ஆகவே நல்லதொரு தீர்ப்ப சொல்லுவார் என்ற நம்பிக்கையில் முதலில் நடுவர் அங்கிளுக்கு வணக்கம்.
எங்கள் அணியை ஆதரித்து ஆரவாரம் செய்ய காத்திருக்கும் பார்வையாளர்களுக்கும் சிறப்பு வணக்கம்.

சீனாவின் மக்கள் தொகையை விட அமெரிக்காவின் மக்கள் தொகை குறைவு... ஆனால் இராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் அமெரிக்கா தான் வலிமையான தேசம். ஆகவே "ஆண்களே" அணியினரே -- உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு--- குறிப்பா என் அக்காவ பாத்தா இன்னும் பாவமா இருக்கு....

 நடுவர் அவர்களே, உங்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை கொடுத்து அதன் மூடியை கழட்டி கொடுக்க சொல்கிறார் ஒருவர். நீங்களும் கழட்ட முயற்சிகிறிங்க. அந்த மூடி வெறுமனே சுற்றுகிறது(இந்திய தயாரிப்பு). கழட்ட முடியவில்லை. நீங்கள் என்ன செய்விங்க?. என்னால முடியலனு அந்த பாட்டில கொடுத்து விடுவிர்களா? நிச்சயம் அப்படி செய்ய மாட்டிங்க. எப்படியாவது முயற்சி பண்ணி திறந்து கொடுத்து விடுவிர்கள். ஏனென்றால் மனிதனுக்கு பொதுவாகவே வீம்பு , வைராக்கியம் அதிகம். அதிலும் ஆண்களுக்கு கூடதலாகவே இருக்கும்.

 காதல்னு வரும் போது இந்த வீம்பும் வைராக்கியமும் தான் , நமக்கு நாமே வச்சிகிற சரியான ஆப்பு. நம்மோட இந்த வீம்பு , வைராக்கியத்தை பெண்கள் மிக அற்புதமாக பயன்படுத்தி கொள்வார்கள்.

 நாம  பாட்டுக்கு நம்ம வேலைய பாத்துட்டு இருப்போம். ஆனா அவங்க நம்மல அப்படி இருக்க விட மாட்டங்க. அவங்க நிறத்துக்கும் உடல் அமைப்புக்கும் சற்றும் பொருந்தாத நிறத்துலயும் டிசைன்லயும் உடை உடுத்திட்டு வருவாங்க. என்னடா இது, இப்படி கூடவா ட்ரெஸ் பன்னுவாங்க? அப்படினு நெனச்சி தான் நாம அவங்கள் பார்ப்போம். ஆனா அவங்களுக்கு இது புரியாது. ஏதோ நாம அவங்கள ரசிச்சி தான் அப்படி பார்ப்பதாக நினைத்து கொண்டு , தினம் தினம் அப்படியே வருவாங்க. அதோட நிறுத்திக்காம , நம்ம பார்வையில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி நம் அருகில் வந்து வந்து செல்வார்கள். நம் கண்ணில் படும் படியும், மனதை தொடும் படியும் பல நல்ல காரியங்களை செய்வார்கள்.

 நாம் எதேச்சயாக அவர்களை பார்த்து விட்டாலும், எதோ அவர்களை பார்ப்பதற்காகவே திரும்பியதாக நினைத்து கொண்டு போகிற போக்கில் ஒரு புன்னகையை வேறு விட்டு செல்வார்கள். அவர்கள் தொழிகளுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது நாம் அவர்கள் பார்வையில் படும் படி இருந்து விட்டால் போதும். நமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத விஷயத்தை பற்றி பேசிகொண்டிருந்தாலும் நம்மை பார்த்துக் கொண்டு தான் பேசுவார்கள்.

உடனே நமக்கு இங்க ஒரு ப்ளாஷ் பேக் வரும்.
" சும்மா சும்மா நம்ம பக்கம் வந்துட்டு போறா
 பார்த்து சிரிக்கிரா
 நம்மல பாத்துக்கிட்டே
 வேற யார்க்கிட்டயோ பேசறா"
ஒருவேளை இது அதுவா இருக்குமோ? என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே , நம்ம அனுமதி இல்லாமலே வியர்வை சுரப்பிகள் வழியாக ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள் நம் உடலுக்குள் புகுந்து பறக்க ஆரம்பித்து விடும்.
இதெல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தான் என்று புரிவதற்குள் அந்த பெண் அருகில் நாம் இருப்போம் காதலை சொல்ல. ஆண் சொல்லிய உடனே அந்த பெண் நம் காதலை அந்த பெண் ஏற்றுகொள்ள மாட்டாள். ஒருவேளை அவளுக்கும் அவன் மேல் காதல் இருந்தாலும். ஏனன்றால், உடனே ஒப்புக்கொண்டால் அவர்கள் தன் மானதிற்கு இழுக்கு வந்துடுமாம். இவள் இதுக்கு தான் காத்துக்கொண்டிருந்தால் என்று யாரேனும் நினைத்து விட்டால் என்ன செய்வது  என்ற பயம். மேலும், அவர்களுக்கு மிக நன்றாக தெரியும். ஆணின் மனதில் எதேனும் ஒன்றின் மீது பற்று ஏற்பட்டுவிட்டால் அதை நிறைவேற்றமால் விட மாட்டான் என்று.

இதல்லாம் நமக்கு புரியாது.
அவள் மறுப்பு அவமானமாய் படும்.
ஏற்கனவே இருக்கும்
காதல் அமிலமும்
புதியதாய் சேர்ந்த
அவமானம் என்ற காரமும்
வினை புரிய ஆரம்பித்து விடும்.
இந்த வினையின் வேகம் குறையாமல்
வீம்பு மற்றும் வைராக்கியம் என்ற வினை ஊக்கிகள் பார்த்துக்கொள்ளும்.

பிறகென்ன?
சில பல முயற்சிகளுக்கு பிறகு அந்த பெண்ணின் மனதில் இருந்த காதலை வெளிச்சதுக்கு கொன்டுவந்து இவன் இருட்டில் மாட்டிக்கொள்வான்.

வீம்புக்கும் வைராக்கியத்துக்கும் என் அக்கா கொடுக்கும் உதாரணம்.

<<சமீபத்தில் சிறிய அளவிலான ஒரு புறநகர் மிருகக்காட்சி சாலைக்குச்
சென்றிருந்தேன். மயிலொன்று தோகை விரித்தாடியது. பெண் மயில் கண்டுகொள்ளவேயில்லை.
அது பாட்டுக்கு நடந்து திரிந்துகொண்டிருந்தது. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆண்
மயிலுக்கோ வேறு எண்ணமே மண்டைக்குள் ஓடவில்லை. சுற்றிச் சுற்றி, பின்தொடர்ந்து
முன்தொடர்ந்து, பின்னால் போனால் முன்னால் வந்து, கண்டுகொள்ளாமல் போனால்
மீண்டும் வந்து... இப்படியாக அரும்பாடுபட்டுக்கொண்டிருந்தது. இதையே தான்
மனிதகுல ஆண்மக்களும் தொன்றுதொட்டு அன்று முதல் இன்று வரை
செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள். >>

<<கடைக்கண் பார்வை என்பதைக் காதல் குளத்தில் கல்லெறிவதற்கு ஒப்பிடமுடியாது.ஒரு
பெண் கடைக்கண் பார்வை வீசினாலும் மனம் விரும்பினாலும் மௌனம் காப்பாள். காதலைச்
சொல்லாமல் தனக்குள் மருகிக்கொண்டிருந்தாலும் சரி, முதல் அடி
எடுத்துவைக்கமாட்டாள். அவனோ இதைக் கண்டுகொள்வான்>>

கடைக்கண் பார்வையை வேண்டுமானால் கல் எறிவதற்கு ஒப்பிட முடியாமல் இருக்கலாம்.
ஆனால் மனம் விரும்புவதை என்னவென்று எடுத்துக்கொள்வது?
இல்லாத ஒன்றை யாரும் கண்டுகொள்ள முடியாது... என் அன்பு அக்காவின் கருத்து படியே சொல்வதென்றால் , முதலில் காதல் குளத்தில் கல் எறிவது பெண்தான். அதை கன்டுகொள்வதுதான் ஆண்.
காதல் விதையை விதைபது பெண். அதற்கு நீர் பாய்ச்சி உரம் போட்டு வளர்பது மட்டும் தான் ஆண்.

ஆகவே நடுவர் அங்கிள்,
அமைதியாய் இருக்கும் ஆண் மனதில் காதல் விதையை விதைத்து, காதல் குளத்தில் முதலில் கல்லெறிவது பெண்களே என சொல்லிக்கொண்டு "அய்யோ பாவம்" அணியினருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை சொல்லிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

அடுத்து எங்கள் அணியில் மதுமிதா, மீரான், நம்பிக்கை பாண்டியன் , ஜோ தம்பி , ஹயா , நா.ஆனந்த குமார்  கலக்க போறாங்க பாருங்க...

வாய்ப்புக்கு நன்றி.


--
*Gandhi..SSSanjaiGandhi*
     Its None of my Business What you Think of Me.

அன்புடன் பட்டிமன்றத்தில் சேது அக்காவின் உரை..

பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய மாண்புமிகு நடுவர் ரசிகவ் ஞானியார்
அவர்களுக்கும்,

பேருரை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்க, ரத்தினச் சுருக்கமாக உரையாற்றி
இந்தப் பட்டிமன்றத்தைத் துவக்கிவைத்து ஊக்கமளிக்கும் ஜெயபாரதனுக்கும்,

இந்தப் பட்டிமன்றத்தை சாத்தியமாக்கிக் கொடுத்த புகாரிக்கும்,

காதல் குளத்தில் கல்லெறிவது வேறு யாருமல்ல, ஆண்களே என்று ஆணித்தரமாகச்
சொல்லவந்திருக்கும் என் இனிய நண்பர்களுக்கும்,

போலியாகவாவது சொல்லிக்கொள்வோம் - அது பெண்களே தான் என்று பேச்சுக்காய்ச்
சொல்லவந்திருக்கும் எதிரணியினருக்கும்,

வணக்கம்!

ஆண்டு விழாத் தலைவர் விக்கி சொன்னதிலிருந்தே துவங்குகிறேன்: "என்னது ஆண்களே
பட்டியல் இம்புட்டு நீளமா இருக்கு" என்றாரல்லவா? "உண்மையின் நீளம் அதிகம்" என்ற
பொன்மொழியைக் கேட்டிருக்கிறீர்களா அன்பர்களே? இதற்கு முன் கேட்டிருக்க
மாட்டீர்கள். ஏனென்றால் அதைச் சொன்னது நான் தான், அதுவும் இப்போது தான்!

அனைவரும் சொன்ன "முதல் கருத்தில்" என்னை மிகவும் கவர்ந்தது சிங்கை
அரங்கநாதனுடையது:

<<யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்

முதலில் தலைவனே நோக்குகிறான். ஆனால் தலைவன் நோக்குவது தலைவிக்கு எப்படித்
தெரியும்? அவன் நோக்குவானா என்று கவனித்துக் கொண்டிருந்தாளா? எது எப்படியோ
தலைவி சிரிக்கிறாளோ ஜாடை காட்டுகிறாளோ. தைரியமாகத் தலைவியிடம் தலைவனே முதலில்
காதலைத் தெரிவிக்கிறான். இதுவே தமிழ்க் காதல். இலக்கியக் காதல். வாழ்வில்
நிகழும் உண்மையான காதல். எனவே ஆண்களே காதல் குளத்தில் முதலில்
கல்லெறிகிறார்கள். பெண்காதலை ஒளித்து வைக்கிறாள். ஆணே தைரியமாக அதனை
வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான்.>>

என்ன அழகாகச் சொல்லியிருக்கிறார்! சிரிப்பதோ ஜாடை காட்டுவதோவெல்லாம் காதல்
குளத்தில் கல்லெறிவதென்று பொய்யாகக் கற்பித்துகொள்கிறார்கள் இந்தக்
கலிகாலத்தில். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் காதல் உணர்வைத் தெரிவிப்பதும்,
ஆழ்கடலில் ஒளித்துவைக்கப்பட்ட உணர்வுகளைத் தூண்டிலிட்டு வெளியிழுத்து
வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதும் தானே வாழ்க்கையில் கள்ளூறச் செய்யும் கல்!

உலகம் தெரியாத பள்ளிக்கூடப் பருவமாகட்டும், பதின்வயதின் உச்சத்தில் வரும்
கல்லூரிப் பருவமாகட்டும், அனைத்திலும் தொடர்ந்து கல்லெறிவது ஆண்கள் தான்.
உதாரணத்துக்கு உங்கள் ஊர்ப் பேருந்து நிறுத்தத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்.
தினம் தினம் நாம் காணும் சம்பவம் தான். காலை எட்டரை மணிக்குப் பள்ளிக்கூடம்
செல்லும் பருவப்பெண்களை விட்டுவைக்கிறார்களா, கல்லூரிப் பெண்களை
விட்டுவைக்கிறார்களா? வேலைக்குச் செல்லும் மகளிரை விட்டுவைக்கிறார்களா?

நான் பள்ளிக்கூடத்தில் படித்தபோது ஒரே வளாகத்தினுள் அமைந்த மூன்று மகளிர்
பள்ளிக்கூடங்களில் ஒன்றில் படித்தேன். அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு
ஆண்கள் பள்ளிக்கூடம். எதிர்புறம் சென்றால் ஐந்தாறு நிறுத்தங்கள் சென்று இன்னொரு
ஆண்கள் பள்ளிக்கூடம். இன்னும் கேட்கவும் வேண்டுமா? பெண்களின் கடைக்கண்
பார்வைக்கு ஏங்குவதைப் பற்றி மட்டும் நான் சொல்லவரவில்லை. அதற்கும் ஒரு படி
மேல், கடைக்கண் பார்வை கிட்டும் நேரம் ரூட் போட்டு ரூட் பஸ்ஸில் பயணிப்பதைச்
சொல்கிறேன். கோவையில் இதற்கெல்லாம் பெயர்போன பேருந்து வழி "7".
கோவைக்காரர்களைக் கேளுங்கள். ஏழைப் பற்றிப் பேசித்தீர்ப்பார்கள்.

பீளமேடு என்ற நகர்ப்புறத்தில் அவினாசி சாலை முழுக்க எங்கெங்கு காணினும்
எக்கச்-சக்கச்-சக்கமான பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளுமாக சாலையே
பூத்துக்குலுங்கும். நிற்க, அவை மட்டுமா பூத்துக்குலுங்கும்? நம் ரோமியோக்களும்
தான்! பெண்கள் பாட்டுக்கு அவர்கள் உண்டு அவர்கள் பேருந்து உண்டு என்று மகளிர்
பேருந்தில் பயணித்தாலும் அது நிறுத்தத்தில் நிற்கும்போது நிறுத்தத்திற்கு
வெளியே நடக்கும் பல்டிகளைப் பார்க்கவேண்டுமே!

அடுத்ததாக, வேலைக்குச் செல்லுமிடத்தில். பணியாற்றும் இடங்களில்
பரிமாறிக்கொள்ளப்படும் உள்ளங்கள் ஏராளம். அவற்றிலும் நம்மூர்ப் பெண்கள்
அடக்கியே வாசிப்பார்கள். நம் பாரம்பரியமும் வளர்ப்பும் அப்படி. ஆண்கள் தான்,
அரங்கநாதன் சொன்னதுபோல, அதை எப்பாடுபட்டாவது வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது.
(அன்புடனிலேயே அனுபவப்பட்டவர்கள் இருக்கிறார்கள் ;-) கேட்டுப்பாருங்கள்!)

தெரிந்தவர்களுக்குள், சொந்த பந்தத்துக்குள், அடுத்த வீடு எதிர்த்த
வீட்டுக்குள், நண்பர்களின் உடன்பிறப்புகளுக்குள் காதலா? அங்கேயும் காதலைச்
சொல்லி வெற்றிக்கொடி நாட்டுவது ஆண்களே! அத்தை பெண்ணும் மாமா பெண்ணும் பாவம்,
அப்பா அம்மாவுக்கும் தாத்தா பாட்டிக்கும் கட்டுப்பட்டு தேமே என்றிருப்பார்கள்.
நம் ஹீரோ இருக்கிறாரே.. விடுவாரா? விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு
வந்திருக்கும்போது விவரமாகத் திட்டமிட்டு விதைத்துவிடுவார் காதலை! எதிர்த்த
வீட்டுப் பெண்ணா? போகும்போதும் வரும்போதும் பைக்கை வைத்து வட்டம் போட்டே
வளைத்துப் பிடிப்பார் நம் நாயகன்! பண்டிகைக்குப் பலகாரம், இனிப்பு கொண்டு வரும்
பக்கத்து வீட்டுப் பெண்ணையும் விட்டுவைப்பதில்லை!

சமீபத்தில் சிறிய அளவிலான ஒரு புறநகர் மிருகக்காட்சி சாலைக்குச்
சென்றிருந்தேன். மயிலொன்று தோகை விரித்தாடியது. பெண் மயில் கண்டுகொள்ளவேயில்லை.
அது பாட்டுக்கு நடந்து திரிந்துகொண்டிருந்தது. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆண்
மயிலுக்கோ வேறு எண்ணமே மண்டைக்குள் ஓடவில்லை. சுற்றிச் சுற்றி, பின்தொடர்ந்து
முன்தொடர்ந்து, பின்னால் போனால் முன்னால் வந்து, கண்டுகொள்ளாமல் போனால்
மீண்டும் வந்து... இப்படியாக அரும்பாடுபட்டுக்கொண்டிருந்தது. இதையே தான்
மனிதகுல ஆண்மக்களும் தொன்றுதொட்டு அன்று முதல் இன்று வரை
செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள்.

கடைக்கண் பார்வை என்பதைக் காதல் குளத்தில் கல்லெறிவதற்கு ஒப்பிடமுடியாது. ஒரு
பெண் கடைக்கண் பார்வை வீசினாலும் மனம் விரும்பினாலும் மௌனம் காப்பாள். காதலைச்
சொல்லாமல் தனக்குள் மருகிக்கொண்டிருந்தாலும் சரி, முதல் அடி
எடுத்துவைக்கமாட்டாள். அவனோ இதைக் கண்டுகொள்வான். அவள் பார்வையையும் பேச்சையும்
கவனித்துக்கொண்டேயிருந்துவிட்டு, அதுதான் அதுதான் அதுவேதான் என்று தனக்குள்
ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, சொல்லமாட்டாமல் உருகிக்கொண்டும் மருகிக்கொண்டும்
கிடந்த தேங்காயைத் திடீரென்று ஒரு நாள் டமாரென்று போட்டுச் சிதறுகாய்
உடைப்பான். இப்படியாக, பாதையோரக் கல்லோ பாராங்கல்லோ - கைக்குக் கிடைத்ததைக்
குளத்தில் வீசுவான். குளம் அதற்காகக் காத்திருந்ததா அல்லது குளத்துக்கே
அதிர்ச்சியான ஆச்சரியமாய் வந்ததா என்பதெல்லாம் இங்கே பேச்சில்லை! ஆனால் அவன்
எதிர்பார்த்ததுபோலவே அதன் தாக்கம் இதயத்தின் மத்தியில் துவங்கி அலையலையாய்
அடித்துக் கரை வரை பெருக்கெடுத்து ஆர்ப்பரிக்கும்.

அன்புடனின் இரண்டாவது பட்டிமன்றத்தில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் நன்றி கூறி, காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம், இரவு
வணக்கம் சொல்லி விடைபெறுகிறேன் (அவரவர் நேரத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளவும்!)

அன்புடன்
சேதுக்கரசி



--
*Gandhi..SSSanjaiGandhi*
     --Break the Rule-
Its None of my Business What you Think of Me.

அன்புடன் குழுமத்தில் பட்டிமன்றம்...

அன்புடன் குழுமத்தில் ஒரு அற்புதமான தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. தலைப்பு :  "காதல் குளத்தில் கல்லெறிபவர்கள் ஆண்களா? பெண்களா?"

பெண்களே என்ற தலைப்பில் 10 பேரும், ஆண்க்களே என்ற தலைப்பில் 8 பேரும் பேசுகிறோம்.
பெண்களே என்ற அணியின் முதல் உரையை நான் தொடங்கி வைத்தேன். எனக்கு மேடைகளில் பேச வேண்டும் என்ற ஆசை பள்ளி பருவம் முதல் இருந்தது. அப்போதெல்லாம் மேடையை கண்டதும் நடுக்கம் வந்து விடும். பல முறை பேச்சு  போட்டிகளில் பெயர் கொடுத்து, பேச வேண்டிய நேரத்தில் ஓடி ஒளிந்து கொள்வேன்.பிறகு கல்லூரியில் வேதியியல் துறை செயலாளராக இருந்த போது அவ்வப்போது மேடையில் பேசியதுண்டு.

அன்புடனில் வித்தியாசமான வாய்ப்பு. இங்கே மேடை ஏற வேண்டியதில்லை. ஆகவே ஒரு குறுட்டு தைரியத்துடன் களம் இறங்கி விட்டேன்.
முதலில் என் அன்பு சேது அக்கா பேசியது,
பிறகு, எனக்கே கொஞ்சம் சிறுபிள்ளை தனமாக இருந்த என் உரை ....

 

--
*Gandhi..SSSanjaiGandhi*
Its None of my Business What you Think of Me.

Weekend Reading : The Duck and the Devil

The Duck & the Devil

There was a little boy visiting his  grandparents on their farm. He was
given a slingshot to play with out in the woods. He practiced in the
woods, but he could never hit the target. Getting a little discouraged, he
headed back for dinner. As he was walking back he saw Grandma's pet duck.

Just out of impulse, he let the slingshot fly, hit the duck square in the
head, and killed it. He was shocked and grieved
In a panic, he hide the dead duck in the wood pile, only to see his sister
watching! Sally had seen it all, but she said nothing.

After lunch the next day Grandma said, "Sally, let's wash the dishes." But
Sally said, "Grandma, Johnny told me he wanted to help in
the kitchen." Then she whispered to him, "Remember the duck?" So Johnny did
the dishes.

Later that day, Grandpa asked if the children wanted to go fishing and
Grandma said, "I'm sorry but I need Sally to help make supper."
Sally just smiled and said," Well that's all right because Johnny told me
he wanted to help." She whispered again, "Remember the duck?" So Sally
went fishing and Johnny stayed to help.

After several days of Johnny doing both his chores and Sally's . he
finally couldn't stand it any longer.
He came to Grandma and confessed that he had killed the duck. Grandma
knelt down, gave him a hug, and said, "Sweetheart, I know. You see, I was
standing at the window and I saw the whole thing, but because I love you,
I forgave you. I was just wondering how long you would let Sally make a
slave of you."

Thought for the day and every day thereafter?

Whatever is in your past, whatever you have done... and the devil keeps
throwing it up in your face (lying, cheating, debt,fear, bad habits,
hatred, anger, bitterness, etc.)... whatever it is... You need to know
that God was standing at the window and He saw the whole thing... He has
seen your whole life. He wants you to know that He loves you and that you
are forgiven.

He's just wondering how long you will let the devil make a slave of you.

The great thing about God is that when you ask for forgiveness, He not
only forgives you, but He forgets .. It is by God's grace and mercy
that we are saved.

Go ahead and make the difference in someone's life today. Share this with
a friend and always remember:.  God is at the window



--
*Gandhi..SSSanjaiGandhi*
     --Break the Rule-
Its None of my Business What you Think of Me.
 
sanjai